Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: 2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது.
அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
மற்ற இரு நடிகைகளை விட மடோன்னா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சிறு இடைவெளிக்குப் பின்னர் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இப்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.